பெரும் வரவேற்பு... டெக்னாலஜி துறையில் சாதனை... இனி 50 வருஷத்துக்கு சார்ஜர் தேவையில்லை... சந்தைக்கு வருகிறது லேட்டஸ்ட் மொபைல் பேட்டரி!

 
சார்ஜர்

உலகம் முழுவதுமே தகவல் தொழில்நுட்ப துறையில் மிக பெரும் சாதனையாகவும், வரவேற்பைப் பெற்ற சாதனமாகவும் செல்போன்கள் பார்க்கப்படுகிறது. வீட்டில் நான்கு பேர் இருந்தால், அந்த வீட்டில் குறைந்தபட்சமாக 6 செல்போன் எண்கள் இருக்கின்றன. டூயல் சிம் செல்போன்கள் எல்லாம் கடந்து, தற்போது மூன்று நான்கு சிம்கார்டுகள் பயன்படுத்தக்கூடிய செல்போன்கள் எல்லாம் சந்தைக்கு வந்த விட்ட நிலையில், சார்ஜ் இல்லாமல், பலரும் அவதிக்குள்ளாவது உண்டு. ரெண்டு சிம்கார்டு, மூன்று சிம் கார்டுகள் போட்டிருந்தாலும், சார்ஜ் இல்லைன்னா பலன் இல்லை தானே?

இந்நிலையில், சார்ஜ் செய்யாமலேயே 50 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய பேட்டரியை சீன நிறுவனமொன்று உருவாக்கி அசத்தியுள்ளது. இதன் மூலம் மின்னணு துறையில் மிகப்பெரும் புரட்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 மற்றும் 2025-க்கு இடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்த 14-வது ஐந்தாண்டு திட்டத்தை சீனா  செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ், அணு மின்கலங்களை தயாரிப்பது மற்றும் அவற்றை வணிகப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை இலக்காக கொண்டு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் விளைவாக, சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான  ‘பீட்டா வோல்ட்’  (Beta volt)   புதிய வகை பேட்டரியை தயாரித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. தங்கள் பேட்டரி 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், சாதாரண பேட்டரிகளைப் போல நிலையான சார்ஜிங் அல்லது பராமரிப்பு தேவைப்படாது என்றும் பீட்டா வோல்ட் நிறுவனம் உத்தரவாதம் அளித்திருக்கிறது.

63 அணுசக்தி ஐசோடோப்புகளை (nuclear isotopes) ஒரு நாணயத்தை விட சிறிய தொகுதியாக வைத்து, அணுசக்தியை ஆற்றல் சக்தியாக  மாற்றித் தருவது உலகிலேயே முதன் முதலில் இந்த பேட்டரி தான் என்று பீட்டா வோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சார்ஜர்

பீட்டா வோல்ட் தயாரிக்கும் தனது முதல் அணுக்கரு பேட்டரி 15x15x5 கன மில்லிமீட்டர் அளவில் இருக்கும் என்று கூறியுள்ளது. இதனால் 100 மைக்ரோ வாட்   மற்றும் 3 வோல்ட் பவரை வழங்க முடியும். இருப்பினும், 2025-க்குள் 1 வாட் ஆற்றலை வழங்கும் மேம்படுத்தப்பட்ட பேட்டரியை தயாரிப்பதே தங்களின் இலக்கு என்றும், அளவில் சிறிதாக இருப்பதால் அதிக சக்தியை உருவாக்க அவற்றை ஒன்றாக இணைக்க முடியும் என்றும் பீட்டா வோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த அடுத்த தலைமுறை பேட்டரி ஏற்கனவே சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளது.  சோதனைகளுக்கு பின் அவை தொலைபேசிகள் மற்றும் ட்ரோன்கள் போன்றவற்றில் வணிக பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளது பீட்டா வோல்ட்.

விண்வெளி, ஏஐ உபகரணங்கள், மருத்துவ சாதனங்கள், நுண்செயலிகள், மேம்பட்ட சென்சார்கள், சிறிய ட்ரோன்கள் மற்றும் மைக்ரோ ரோபோக்கள் போன்ற பல விஷயங்களில் இந்த அணுசக்தி பேட்டரிகளால் நீண்ட கால மின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்கிறது பீட்டா வோல்ட்.

ஏஐ தொழில்நுட்ப புரட்சியில் சீனா முன்னேறிச் செல்ல தங்களின் இந்த பேட்டரி தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கும் என்று பீட்டா வோல்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web