பிரபல நடிகரின் பிறந்தநாளில் சோகம்... பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

 
யாஷ்

பிரபல கன்னட திரைப்பட நடிகர் யாஷ் பிறந்தநாளில், வாழ்த்தி பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்

கன்னட திரைப்பட நடிகர் கே.ஜி.எஃப் புகழ் யாஷ், தனது 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு பேனர்கள் நலத்திட்ட உதவிகளை செய்து  சமூக வலைதளங்களில் அதனை பதிவிட்டு வருகின்றனர்.தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் யாஷ். இவர் 2007 ல்   ஜம்பதா ஹுடுகி என்ற படம் மூலம் கன்னட திரையுலகில்  அறிமுகமானார். அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களும் இவரை திரும்பி பார்த்தனர்.   

யாஷ்

தொடர்ந்து கேஜிஎஃப் 2 படத்தில் நடித்திற்கு பிறகு தற்போது  அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருகிறார்.  அவரது பிறந்த நாளான இன்று அவருக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில்   கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ரசிகர்கள் பேனர் வைக்க சென்றனர். திடீரென அப்போது   மேலே சென்ற மின்னழுத்த கம்பி பேனர் மீது உரசியதில் 3 பேர்  சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்

யாஷ்

. மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முன்னதாக கடந்தாண்டு ஜூலை மாதம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயற்சித்த  ஆந்திர ரசிகர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது யாஷ் பிறந்தநாளிலும் அதே சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web