வைரலாகும் வீடியோ... பாரம்பரிய உடையில் ஒரே இடத்தில் 37,000 பெண்கள் நடனம்!
துவாரகா கிருஷ்ணா நாகரில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில், 37,000க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய உடையில் மஹாராஸ் நிகழ்ச்சியில் திரண்டு நடனமாடினார்கள். இந்த நடனத்தைக் காண இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குவிந்தனர்.
துவாரகா எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த மஹாரஸில் பங்கேற்க குஜராத் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து பெண்கள் வந்திருந்தனர். நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள புனித நகரமான துவாரகாவில் திவ்ய மகராஸ் நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் இரண்டு லட்சம் அஹிர் சமூகத்தினர் இந்த நடன நிகழ்வைக் கண்டுகளித்தனர்.
#WATCH देवभूमि द्वारका, गुजरात: अहीर समुदाय की महिलाओं ने यात्राधाम में अखिल भारतीय महारास संगठन के तहत महारास किया। pic.twitter.com/CCGtkgicQw
— ANI_HindiNews (@AHindinews) December 24, 2023
இந்த பாரம்பரிய நடனம் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ண யாதவ் குலத்தைச் சேர்ந்த 37,000 அஹிராணிகள் ஒன்று சேர்ந்து, தங்கள் ஆடைகளை எடுத்து ராஸ் வடிவில் துவாரகாதீஷ் பகவானின் பாதத்தில் சமர்ப்பித்து, துவாரகையில் உலக சாதனை படைத்தனர்.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!