பகீர் சிசிடிடி காட்சிகள்... பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் ... பீதியில் பெற்றோர்கள்!

இந்தியாவில் பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியின்மீது மர்மநபர்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர காவல் நிலையம் வரம்பிற்குள் உள்ள ஹத்ஸர் கஞ்ச் பகுதியில், மர்மநபர்கள் கைக்குண்டுகள் வீசினர். இவர்கள் பள்ளியின் பிரதான வாயிலிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கற்களை எறிந்தனர். இச்சம்பவம் பள்ளியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணைக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் அல்லது காயங்களும் ஏற்படவில்லை . இருந்தாலும் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். அதே நேரத்தில் பள்ளியின் கட்டமைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்தில் சுமார் 12 பேர் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் பழிவாங்கும் நோக்கில் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம், பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிகாரிகள் பள்ளியின் பாதுகாப்பை அதிகரித்து, தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் குற்றவாளிகளை கண்டறிந்து, விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதி அளித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் எந்தவொரு தகவலையும் வழங்க விரும்பினால், காவல்துறையை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!