ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்கள் சட்டமாக அமலுக்கு வந்தன... தமிழக அரசு அதிரடி!

தமிழக அரசு ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஆளுநர் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளார் , அவருக்கு தனி அதிகாரம் எதுவும் கிடையாது என பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
அதே போல் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம். ஜனாதிபதிக்கு அனுப்பிய மசோதாக்கள் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்தோடு அந்த 10 மசோதாக்களுக்கும் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்குவதாக உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு நாளிதழில் தற்போது 2023ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்களை அந்த நாளிலேயே ஒப்புதல் வழங்கியதாக கருத வேண்டும் என தற்போது செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பிய அந்த 10 மசோதாக்களும் தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!