தமிழகத்தில் 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்... வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

 
முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் வாழ்த்துரை ..!


தமிழக முதல்வர் ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தை மதிப்பவராக இருந்தால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

வானதி சீனிவாசன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு குறித்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். 

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசுக்கும், டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே, துணை ஜனாதிபதியின் கருத்து அமைந்திருந்தது.

 தீட்டு என்பதால் வகுப்பறையில் அனுமதி மறுப்பு... பெண் அடிமைத்தன மனப்போக்கு... வானதி சீனிவாசன் வேதனை!

இதனால் நிலைகுலைந்துபோன முதல்-அமைச்சர் ஸ்டாலின், 'யாரும் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது. ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளால் அரசுகள் நடத்தப்பட வேண்டும்' என கூறியிருக்கிறார். இதைத்தான் துணை ஜனாதிபதியும் கூறியிருக்கிறார். ஸ்டாலின் தனது கருத்தை திரும்ப படித்துப் பார்க்க வேண்டும். "யாரும் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க கூடாது" என்பதுதான் பா.ஜ.க.வின் கருத்தும்.

முதல்வர் ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தையும், டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பையும், உண்மையிலேயே மதிப்பவராக இருந்தால், அரசியல் சட்டத்தில் உள்ள, உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web