10000 பேர் பணி நீக்கம்!! கூகுள் அதிரடி!! கலங்கி தவிக்கும் ஊழியர்கள்!!
சமூக வலைதளங்களில் ட்விட்டர் நிறுவனம் அதன் பணியாளர்களை அதிரடி பணி நீக்கம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் 10000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஒரு சில ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பது அதன் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது
கொரோனா தளர்வுகளுக்கு பிறகு உலக நாடுகள் அனைத்துமே பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதனால் பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவது தினசரி கதையாகி விட்டது. அமேசான் பேஸ்புக் ட்விட்டர் உட்பட பல நிறுவனங்களில் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கூகுள் நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
செயல்திறன் அடிப்படையில் பணிநீக்கம் செய்ய அந்தந்த பிரிவின் மேலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களை பணி நீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!