10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்... இந்த 5 மாவட்டங்கள் தான் டாப் !

 
மாணவிகள்


 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டது. 
மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ  இணையதளங்களான  www.results.digilocker.gov.in ,  https://tnresults.nic.in/  மூலம் அறிந்து கொள்ளலாம்.

மாணவிகள்

அதைப்போலவே, மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு முடிவுகள் நேரடியாக SMS மூலம் அனுப்பப்படும். அப்படி இல்லை எனில் தாங்கள் படித்த பள்ளிகளில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும். மைய மற்றும் கிளை நூலகங்களிலும் முடிவுகளை இலவசமாக பார்க்கலாம்.
2024-2025 ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.55% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

இது கடந்த ஆண்டை (2023-2024) விட 2.25% அதிகமாகும், இது மாணவர்களின் முன்னேற்றத்தையும் கல்வித்துறையின் மேம்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. மாணவிகள் மாணவர்களை விட 5.95% அதிக தேர்ச்சி விகிதத்துடன் சிறப்பாக செயல்பட்டனர். மொத்தம் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.  
சிவகங்கை – 98.31%
விருதுநகர் – 97.45%
தூத்துக்குடி – 96.76%
கன்னியாகுமரி – 96.66%
திருச்சி – 96.61%
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது