இனி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு!

தமிழகத்தில் ஏற்கனவே மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது . இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு 2 பொதுத்தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மாணவர்கள் வாரியத் தேர்வுகளில் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை, 2020 பரிந்துரை செய்ததின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. அதன்படி
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்த கூட்டத்தில்,
1) பத்தாம் வகுப்பில், 2025-2026 லிருந்து இரண்டு வாரியத் தேர்வுகள் நடத்தப்படும்.
2) அதற்கான வரைவுக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
3) இந்த வரைவுக் கொள்கை அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும், அதாவது பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பிறரிடமிருந்து (பொது மக்கள்) பதில்களைப் பெற சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி, வரைவுக் கொள்கை பரந்த விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டு, CBSE இணையதளமான https://cbse.gov.in இல் பதிவேற்றப்பட்டுள்ளது
என்பன உட்பட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!