டிவி பார்த்ததால் தகராறு … 10ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை!

 
லட்சுமணன்
 

நெல்லை மாவட்டம் பணகுடி செய்யது கரீம் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் லட்சுமணன் (16) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவ்வப்போது அருகில் வசிக்கும் சபரிராஜன் (23) வீட்டிற்கு சென்று டிவி பார்ப்பது வழக்கம். கடந்த 5ம் தேதி சபரிராஜன் வீட்டில் தனியாக இருந்தபோது, லட்சுமணன் அங்கு டிவி பார்க்க சென்றுள்ளார்.

ஆம்புலன்ஸ்

அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சபரிராஜன், அருகில் இருந்த அரிவாளால் லட்சுமணனை சரமாரியாக வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து, உயிருக்கு போராடிய மாணவனை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீஸ்

இதற்கிடையே சபரிராஜனை பொதுமக்கள் பிடித்து பணகுடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!