மதுரை உட்பட இரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Feb 21, 2026, 19:43 IST
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், செங்கல்பட்டு, மதுரை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
