12 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த கர்ப்பிணி!! அதிர்ச்சி பிண்ணனி!!

 
ரங்சிவுதபோர்ன்

தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் சரத் ரங்சிவுதாபோர்ன் (32) என்ற பெண், கடந்த 14ஆம் தேதியன்று தனது ஆண் நண்பர் சிரிபோர்ன் கான்வோங்க் என்பவருடன் ரட்சபுரி மாகாணத்தில் புத்த தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது உடன் வந்த ஆண் நண்பர் சிரிபோர்ன் கான்வோங்க் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். 

இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துமவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சில அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் மருத்துவர்கள் கூறினர்.  அதன்படி உயிரிழந்த அந்த நபரின் உடலில் சயனைட் விஷம் கலந்ததும், இதனால் தான் அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ரங்சிவுதபோர்ன்

அப்போது, சிரிபோர்ன் கான்வாங் என்ற நபரை கொலை செய்தது சரரத் ரங்சிவுதபோர்ன் என்ற அதிர்ச்சி தகவல் அம்பலமானது. மேலும், அவர் இதே பாணியில் அவரது முன்னாள் காதலன் உட்பட 12 பேரை கொலை செய்தது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்து அனைவரையும் பதற்றமடையச் செய்தது. 

கொலை செய்யப்பட்ட அனைவரும் 33 முதல் 44 வயதுடைய நபர்கள் எனவும், இவர்கள் அனைவரையும் சரரத் பணத்திற்காக கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.  மேலும், இவர்கள் அனைவரையும் கடந்த 3 ஆண்டுகளில் இத்தனை கொலைகளையும் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அதாவது கடந்த 2020 டிசம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை 12 பேரை கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.  இதற்கிடையில் உயிரிழந்த அனைவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நகை, பணம் காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளனர்.

ரங்சிவுதபோர்ன்

சரரத் ரங்சிவுதபோர்னை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பணத்திற்காக தனது முன்னாள் காதலன் உட்பட 12 பேரை பெண் ஒருவர் சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அப்பெண் கர்ப்பிணியாக இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web