கழிவறையில் ரகசிய கேமிரா மூலம் 1200 ஆபாச வீடியோக்கள்!! கல்லூரி மாணவன் அதிர்ச்சி வாக்குமூலம்!!

 
கேமரா

பெங்களூரு கிரிநகர் ஒசகெரேஹள்ளி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் கல்லூரி மாணவிகள் சிலர் கழிவறை சென்று திரும்பிய போது அங்கே இளைஞர் ஒருவர் நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இனி இந்த இடங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்!

கல்லூரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். கழிவறைக்குள் இருந்து தப்பி ஓடியது அதே கல்லூரியில் 3ம் ஆண்டு பிபிஏ மாணவர் ஆசாத்  என்பது உறுதி செய்யப்பட்டது.  அவரை பிடித்து விசாரித்ததில் ஆசாத் முன்னுக்கு பின் முரணாக பேசினான். கிடுக்கிப்பிடி போடபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இதில் பல திடுக்கிடும் தகவல்களை ஆசாத் ஒப்புக்கொண்டான். அவன் அளித்த வாக்குமூலத்தின்படி மாணவிகளின் கழிவறையில் சுபம் ஆசாத் ரகசிய கேமரா பொருத்தியதும், அந்த ரகசிய கேமரா மூலம் மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரியவந்தது.

போலீஸ்

இதனால் அந்த கல்லூரிக்கு சென்ற போலீசார் ரகசிய கேமராவை பறிமுதல் செய்தனர். மேலும் சுபம் ஆசாத்தின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது செல்போனில் 1200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. சுபம் ஆசாத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது கண்டறியப்பட்டு கல்லூரி நிர்வாகம் அவரை எச்சரித்தது. அப்போது அவர் கல்லூரி நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டதால் ஆசாத் மீது புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web