ரெட் அலெர்ட் … தலைநகர் டெல்லியில் 128 விமானங்கள் ரத்து!
தில்லியில் செவ்வாய்க்கிழமை அடர் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாள்களாகவே பனிமூட்டம் மற்றும் மோசமான காற்று மாசுபாடு நிலவுகிறது.

இந்த நிலையில், தில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த 60 விமானங்களும், வருகை தரவிருந்த 58 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 16 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிற்பகல் வரை பனிமூட்டம் நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தில்லி மட்டுமின்றி ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பனிமூட்டம் கடுமையாக உள்ளது. விமான சேவைகளுடன் சேர்த்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
