வேன் விபத்தில் 12ம் வகுப்பு மாணவி பலி… சாலையை கடக்க முயன்ற போது சோகம்!

 
தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பள்ளிசாலையில் உள்ள தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வேன் மோதிய விபத்தில் 12ம் வகுப்பு மாணவி கோபிகா பரிதாபமாக உயிரிழந்தார். நல்லிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த கோபிகா, தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்து நடந்தது.

ஆம்புலன்ஸ்

பாப்பநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் கோபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் தொடர்புடைய டிராவல்ஸ் வேனில் பயணம் செய்த 16 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!