அதிர்ச்சி.. 13 வயது சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம்... பயிற்சியின் போது விபரீதம்... !
செங்கல்பட்டு மாவட்டத்தில் ”ரைபிள் கிளப்” துப்பாக்கிச் சுடும் பயற்சி மையம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கிளப்பில் தினமும் பலர் துப்பாகிச் சுடும் பயிற்சிபெற்று வருகின்றனர். வழக்கம் போல் இன்றும் துப்பாகிச் சுடும் பயிற்சிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதில் துப்பாக்கிக் குண்டு அங்கிருந்த 13 வது சிறுவனின் மீது திடீரென பாய்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி துப்பாக்கியில் இருந்த ஏர் கன் வெடித்து அலுமினிய குண்டு சிறுவனின் பின் தலையில் பாய்ந்துவிட்டது. இச்சம்பவத்தால் அலறித்துடித்த அந்த சிறுவனின் தலையில் இருந்து ரத்தம் கொட்டத்தொடங்கியது. வெளியேற தொடங்கிய நிலையில், அந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பயிற்சியாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கி குண்டு பாய்ந்து 13 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் தலைநகர் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!