130 கிராம் நகைகள்... மிளகாய்பொடித் தூவி மாமியார் நகைகளைக் கொள்ளையடித்த மருமகன்!

 
கொள்ளை
நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டு, மிளகாய் பொடி தூவி, வாயில் துணியை திணித்து, மாமியாரின் நகைகளைக் கொள்ளையடித்த மருமகனையும், நண்பரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா அஞ்சுடகி கிராமத்தில் வசித்து வருபவர்  நிங்கப்பா பூஜாரி .30 வயதான இவர்  தனது மாமியார் நிங்கவ்வா பூஜாரியிடம் இருந்து  தங்க நகைகள் கொள்ளையடித்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் டார்ச்சர் தாங்கல… செயின் பறிப்பில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை!!

கடந்த ஏப்ரல் 13ம் தேதி அஞ்சுடகியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்ற நிங்கவ்வாவை, மருமகன் நிங்கப்பா தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அதே வழியில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லை என கூறி மாமியாரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு, “நான் பெட்ரோல் வாங்கி வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.  

அடுத்த சில நிமிடங்களில்  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நிங்கவ்வாவின் கண்களில் மிளகாய் பொடி தூவி, வாயில் துணியை திணித்து, கழுத்தில் இருந்த சங்கிலி, கம்மல், வளையல் உட்பட  130 கிராம் தங்க நகைகளை பறித்துச் சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து நிங்கவ்வா கூறியதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

நிங்கப்பாவின் செல்போன் சிக்னல் அந்த இடத்தில் பதிவாகியிருந்தது. இதனால் அவரை பிடித்து விசாரித்த போது, நண்பர் பரசுராமுடன் இணைந்து மாமியாரிடம் இருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது உறுதி செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 130 கிராம் தங்க நகைகளை மீட்டு சென்றனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web