ஒரே பள்ளிப் பேருந்தில் 130 பேர்!! மூச்சுத்திணறலால் மாணவிகள் மயக்கம்!!

 
பள்ளி மாணவிகள் மயக்கம்

மதுரை மாவட்டத்தில்  திருப்பாலை பகுதியில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி . இங்கு ஆயிரக்கணக்கில் மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி முடிந்ததும்  வீட்டிற்கு செல்ல  மாணவிகள்  பள்ளிப்பேருந்தில் ஏறினர். ஒரே பேருந்தில் 130 மாணவிகள் ஏற்றப்பட்டனர். கள்ளந்திரி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பள்ளி மாணவிகள் மயக்கம்

இது குறித்த தகவல் பள்ளிப்பேருந்து ஓட்டுனருக்கு தெரிய வந்ததால் அதே பகுதியில் உள்ள சந்து ஒன்றுக்குள் மாணவிகளுடன் பள்ளிப்பேருந்தை அரைமணி நேரமாக மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டது. மிகச்சிறிய சந்தில் பள்ளிப்பேருந்தில் அளவுக்கு அதிகமாக இருந்த கூட்ட நெரிசலால் 4 மாணவிகள் மூச்சுத்திணறி மயக்கம் போட்டு விழுந்தனர்.  உடனே அவர்கள் கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ்
தற்போது மாணவிகள் 4 பேரும் நலமுடன் இருப்பதாக  அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். ஒரே வாகனத்தில் அதிக அளவிலான மாணவிகளை ஏற்றிச்சென்றது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web