இன்று 1,363 பேருந்து நிறுத்தங்களில் 2ம் கட்டமாக தீவிரத் தூய்மை பணி... சென்னை மாநகராட்சி தகவல்!

 
சென்னை மாநகராட்சி


இன்று சென்னை முழுவதுமாக 1,363 பேருந்து நிறுத்தங்களிலும் 2ம் கட்டமாக தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தினந்தோறும் சராசரியாக 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவுகள்அகற்றப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி ஜேசிபி வடிகால் தூர் வாரும் பணி

தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள், கட்டிடக் கழிவுகள், சாலையோரங்கள் மற்றும் சாலை மையத்தடுப்புகளில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள், பூங்காக்களில் தூய்மைப் பணிகள், விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், பெருமளவு குப்பை சேகரமாகும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து, அந்த இடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், சேதமடைந்த குப்பைத் தொட்டிகளுக்கு மாற்றாக புதிய குப்பைத் தொட்டிகள் வைத்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் மக்களின் சுகாதாரத்தைப் பேணுகின்ற வகையிலும், தூய்மையான நகரமாக விளங்குகின்ற வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் அமைக்கப்பட்ட அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி முதற்கட்டமாக தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள், கட்டிடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அகற்றுதல், பயணியர் இருக்கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னை மாநகராட்சி

இதன் தொடர்ச்சியாக  2ம் கட்டமாக 15 மண்டலங்களிலும் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களிலும் இன்று ஒரேநேரத்தில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளில் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றுதல், இருக்கைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தை சுத்தம் செய்து, பேருந்து நிழற்குடைகள் முழுவதையும் தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்தல், நிழற்குடைகளில் உள்ள பழுதுகளை அடையாளம் கண்டு, அவற்றின் அளவீடுகளை கணக்கெடுத்து மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web