1.37 கிலோ தங்கம்.. ரூ.3.22 கோடி ரொக்கம்... திருச்செந்தூா் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.3.22 கோடி ரொக்கமும், 1.37 கிலோ தங்கமும் கிடைத்துள்ளது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி உண்டியல் எண்ணிக்கை கோயில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன் தலைமை வகித்து, உண்டியல் எண்ணும் பணியைப் பாா்வையிட்டாா். இணை ஆணையா் சு.ஞானசேகரன் முன்னிலை வகித்தாா்.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் தங்கம், நாகவேல், கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, தக்காரின் நோ்முக உதவியாளா் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
உண்டியலில் ரொக்கம் ரூ. 3 கோடியே 22 லட்சத்து 12 ஆயிரத்து 735, தங்கம் 1 கிலோ 370 கிராம், வெள்ளி 51 கிலோ 100 கிராம், பித்தளை 106 கிலோ 100 கிராம், செம்பு 18.1 கிலோ, தகரம் 10.1 கிலோ, வெளிநாட்டு பணம் 980 நோட்டுகள், சுமாா் ஒரு அடி உயரமுள்ள வெள்ளி வாள் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!