நாகை உட்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க உள்ள நிலையில், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோர பகுதிகளுக்கு அருகே நிலை கொண்டுள்ளது.

இதன் தாக்கத்தால் இன்று தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் உள் தமிழகத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மற்றும் வரும் நாட்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடரக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
