இன்று முதல் மார்ச் 8 வரை 144 தடை உத்தரவு!! பீதியில் பொதுமக்கள்!!
திருச்சி அன்பில் கிராமத்தில் அமைந்துள்ளது ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் .இந்த கோவிலில் மாசித் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொள்வர்.
அந்த வகையில் நடப்பாண்டு நடைபெற உள்ள மாசித்திருவிழாவில் அந்த ஊரில் இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருவிழாவில் சிறப்பாக நடைபெறவும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும் மாவட்ட காவல் துறை பல்வேறு கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
மாசி திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உள்ளதால், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் மார்ச் 8ம் தேதி பிற்பகல் 2 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் தடை உத்தரவு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க