அதிகாலையில் அதிர்ச்சி... இலங்கை மீண்டும் அட்டூழியம்... 15 தமிழக மீனவர்கள் கைது!
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது மீனவர்களை கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலுக்கு தமிழக அரசும், அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க எடுக்கவேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு இதுவரை நிரந்தர முடிவு எடுக்கப்படவில்லை என ஆதங்கப்படுகின்றனர் மீனவர்கள். நடுக்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடிப்பதும், மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதும், இதனால் குண்டு பாய்ந்து மீனவர்கள் பலியாகும் சம்பவமும் தொடர்ந்து வருகிறது. அத்துடன் மீனவர்களின் படகுகளை சிறை பிடித்து வைத்துக்கொள்கிறது.இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அனுமதிச் சீட்டை பெற்றுக் கொண்டு சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்; அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை குற்றம் சாட்டியது. அவர்களிடம் இருந்த 2 விசைப்படகுகளையும், அதிலிருந்த 15 மீனவர்களையும் கைது செய்தது .அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றது. தொடர் கைது சம்பவம் ராமேஸ்வரம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்