10 வது பாஸானா போதும்!! 1558 மத்திய அரசு பணியிடங்கள்!!

 
எஸ்எஸ்சி

மத்திய அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 அந்த வகையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உட்பட பல்வேறு   பணியிடங்களை நிரப்ப இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

பதவியின் பெயர்: பன்முக உதவியாளர், ஹவால்தார்

எஸ்எஸ்சி

காலிப்பணியிடங்கள்: 1,558 (பன்முக உதவியாளர் - 1,198, ஹவால்தார் - 360)

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி 

வயது வரம்பு:  18 வயது முதல் 27 வயது வரை 
 SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில்  தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் மூலம் தேர்வு
கணினி வழி தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 1 மணி 30 நிமிடங்கள் கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் மற்றும் திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 90 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் தலா 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஹவால்தார் பணியிடங்களுக்கு கூடுதலாக உடற்தகுதி தேர்வு நடக்கும்.

டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!!  ஊக்க தொகை ரூ.13,000/- 4 மாத இலவச கணினி பயிற்சி!!

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில்   ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 குறிப்பிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2023

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web