மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்து தீப்பிடித்ததில் 16 ஆடுகள் தீயில் கருகி பலி... கதறி அழுத மூதாட்டி!

மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகர் கோ.புதூர் எஸ்.கொடிக்குளம் கண்மாய்க்கரை பகுதியில் வசித்து வந்தவர் மூக்கன். இவரது மனைவி நாச்சம்மாள் குடிசையில் தங்கி அங்கே 16 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென உடல்நலம் குறைவு காரணமாக மூதாட்டி அருகில் உள்ள வீட்டில் தூங்கி விட்டார்.
இந்நிலையில், அவர் வசித்துவந்த குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீவிபத்தில் 16 ஆடுகளும் முழுவதுமாக உயிரிழந்த நிலையில் கிடந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோ.புதூர் காவல் நிலைய போலீசார், விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் வீட்டிற்குள் இருந்த மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்து குடிசை தீப்பற்றி எரிந்து ஆடுகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கணவனை இழந்து தனியாக வசித்து வரும் மூதாட்டி நாச்சம்மாளின் வாழ்வாதாரமே அந்த ஆடுகள் தான். ஆடுகளை வளர்த்து அதன் மூலமாக கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்வாதாரத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் 16 ஆடுகள் தீக்கிரையானதைப் பார்த்து மூதாட்டி கதறியழுத காட்சி காண்பவர்கள் கண்களில் நீர வரவழைத்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!