165 ஆண்டுகால அமெரிக்க மரபு காலி... இனி டாலர் நோட்டுகளில் 'டிரம்ப்' கையெழுத்து!
அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு அதிரடி மாற்றத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் டாலர் நோட்டுகளில் கடந்த 165 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த எழுதப்படாத சட்டமான, 'நிதித்துறை செயலாளர் மற்றும் பொருளாளர் கையெழுத்து மட்டுமே இடம்பெற வேண்டும்' என்ற மரபு தற்போது உடைக்கப்பட்டுள்ளது. இனி புதிதாக அச்சிடப்படும் அனைத்து அமெரிக்க டாலர் நோட்டுகளிலும் அதிபர் டொனால்ட் டிரம்பின் கையெழுத்து இடம்பெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை வரும் ஜூலை 4-ஆம் தேதி பிரம்மாண்டமாகக் கொண்டாடத் தயாராகி வருகிறது. இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், டிரம்பின் பொருளாதாரச் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், "நமது நாட்டின் வரலாற்றுச் சாதனைகளைக் கொண்டாட, டிரம்பின் பெயர் பொறிக்கப்பட்ட டாலர் நோட்டுகளை விடச் சிறந்த வழி வேறில்லை" எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த அதிரடி மாற்றத்தால் உலக நாடுகள் அனைத்தும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளன. 100 சதவீதம் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரவுள்ள இந்த டாலர் நோட்டுகளில், டிரம்பின் கையெழுத்து 2 இடங்களில் இடம்பெறும் எனத் தெரிகிறது. இதுவரை வெறும் 2 அதிகாரிகளின் கையெழுத்து மட்டுமே இருந்த டாலர் நோட்டுகள், இனி ஒரு நாட்டின் அதிபர் கையெழுத்துடன் வலம் வரப் போவது இதுவே முதல் முறை. இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் பல லட்சம் பேரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
