1.67 லட்சம் மாணவர்கள் !! பொறியியில் கல்லூரிகளில் குவியும் விண்ணப்பங்கள்!!

தமிழகத்தில் மே 8ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 2023-24ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு மே 5ம் தேதி தொடங்கியது.
இதற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tneaonline.org, https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர்களின் வசதிக்காக மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்களிலும் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 4ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி வரை 1,66,901 மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 1,16,968 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சான்றிதழ் பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்த மாணவர்களின் எண்ணிக்கை 76269 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!