16வயது சிறுமி 6 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம்!! பிறந்தநாள் விழாவிற்கு சென்ற போது கொடூரம்!!
சமீபகாலமாக இந்தியாவின் வட மாநிலங்களில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருகின்றன. அதே போல் ஒரு கொடூர சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. முப்பையில் வசித்து வரும் 16 வயது சிறுமி அவரது ஆண்நண்பருடன் பிறந்தநாள் விழாவுக்கு சென்றார். இதற்காக அந்த நண்பர் சிறுமியை பரேல் பகுதியில் உள்ள குடிசை வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அந்த வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை. ஏற்கனவே இவரின் 5 நண்பர்கள் தான் அந்த குடிசையில் இருந்தனர். இந்த 6 பேரும் சிறுமியை மிரட்டி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை சிறுமியை மீட்டதுடன் குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போக்சோவின் கீழ் கைது செய்தனர்
அவர்களில் 3 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் மூவரும் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை அருகே வசாய் பகுதியில் சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் விழா என நம்பி நண்பருடன் சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை ஆளானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!