17 சவரன் நகைகள் கொள்ளை... தாய், 2 குழந்தைகளைக் கொன்ற இளைஞர் கைது!
Mar 27, 2025, 17:20 IST
திருச்சியை அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு தாயையும், அவரது 2 குழந்தைகளை கடத்திச் சென்று 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு, 3 பேரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில் கோயம்புத்தூர் மாவட்டம் சுல்தான்பேட்டை இடையார் பாளையத்தைச் சேர்ந்த செ.மணிகண்டன்(36) என்பவர் கைதானார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர், அதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், பெரம்பலூர் போலீசார் மணிகண்டனை கைது செய்து, பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
