விசிக பிரமுகர் வீட்டில் 1,726 மது பாட்டில்கள்.. !! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
சத்தியமூர்த்தி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தில் ஒரு வீட்டில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிதம்பரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

சத்தியமூர்த்தி

இதனையடுத்து தனிப்படை போலீசார் கரிக்குப்பம் கிராமத்தில் குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி என்பவரின்  வீட்டில் பெட்டி பெட்டியாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த  1,726 மது பாட்டில்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சோதனையில் அவை அணைத்தும் புதுச்சேரி வகை மதுபானம் என்பது தெரியவந்தது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசிக பிரமுகர் சத்தியமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சத்தியமூர்த்தி

மேலும் அவர் அப்போது வீட்டில் இல்லை. இந்த நடவடிக்கையை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர்  ரகுபதி ஆகியோர்  நேரில் சென்று ஆய்வு செய்தனர். தலைமறைவாக உள்ள சத்தியமூர்த்தியை போலீசார் தேடி வருகின்னர். விசிக நிர்வாகி வீட்டில் கள்ளச் சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  1.50 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web