17 வயது சிறுமி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்... காதலனே கொலைச் செய்தது அம்பலம்!

 
தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!
குன்றத்தூர் அருகே  17 வயது வட மாநில சிறுமி  தற்கொலைச் செய்துக் கொண்டதாக பதியப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, காதலனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து, சிறுமி தற்கொலைச் செய்துக் கொண்டதாக நாடகம் ஆடியது அம்பலமாகி உள்ளது. 

இந்த வழக்கில் காதலன் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மற்றொருவரைப் போலீசார் தேடி வருகின்றனர். 

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோமா கோபா(19, தனது வீட்டின் அருகே வசித்து வந்த யாஸ்மதி போபாங்(17) என்ற சிறுமியை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் சிறுமி யாஸ்மதியை ஆசை வார்த்தை கூறி, சோமாகோபா ஜார்க்கண்டில் இருந்து அழைத்து வந்து, குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், குமரன் நகர் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்க வைத்து, கணவன்-மனைவி போல் வசித்து வந்திருக்கிறான். 

வீட்டில் கூடவே தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களான சுனில் கோப்(19)மற்றும் பச்சா(19) ஆகியோரையும் தங்க வைத்துள்ளான். இவர்கள் அனைவரும்  திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். 

கடந்த சில தினங்களாக சோமா கோபா நீண்ட நேரம் செல்போனில் ஒரு பெண்ணிடம் பேசி வந்ததான். இதனை சிறுமி கண்டித்து வந்தார். இருந்த போதும், சோமா கோபா அந்த பெண்ணிடம் பேசுவதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்து பேசி வந்தான். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த சிறுமி, கடந்த மாதம் 29ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற குன்றத்தூர் போலீசார் , சிறுமி யாஸ்மதியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியை ஆசை வார்த்தை கூறி, அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி, அவரை தற்கொலைக்கு தூண்டிய  சோமா கோபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வேலூர்  சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் நேற்று சிறுமி யாஸ்மதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் சிறுமி யாஸ்மதியை இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து கழுத்தை நெரித்ததால், யாஸ்மதியின் கழுத்தெலும்பு உடைந்து அவர் இறந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சோமா கோபாவின் நண்பனான அதே அறையில் தங்கியிருந்த சுனில் கோப் என்பவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

இது குறித்து சுனில் கோப் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “நாங்கள் அனைவரும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிறுமியுடன் சேர்த்து நாங்கள் மொத்தம் 6 பேர் குமரன் நகரில் ஒரே வீட்டில் தங்கியிருந்து தினமும் வேலைக்குச் சென்று வந்தோம். சோமா கோபா சிறுமியை காதலித்து ஜார்கண்டில் இருந்து குன்றத்தூருக்கு அழைத்து வந்த நிலையில், ஆரம்பத்தில் சிறுமி யாஸ்மதியின் மீது சோமா கோபா பாசமாக இருந்தான். பின்னர் சோமா கோபாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவன் அடிக்கடி அந்த புதிய பெண்ணுடன் செல்போனில் பேசி வந்தான். ஒரு கட்டத்தில் இது யாஸ்மதிக்கு தெரிய வந்தது. அதனால் அவள் அடிக்கடி சோமா கோபாவிடம் சண்டையிட்டு வந்தாள். இதனால் எரிச்சல் அடைந்த சோமாகோபா, யாஸ்மதியை எப்படியாவது கொலைச் செய்ய வேண்டும் என்று என்னிடமும், பச்சாவிடம் உதவி கேட்டான். அதற்கு நாங்கள் சம்மதித்தோம். அதன் பிறகு சம்பவம் நடந்த அன்று நான், சோமா கோபா மற்றும் பச்சான் 3 பேரும் சேர்ந்து, சிறுமி யாஸ்மதியின் கழுத்தை நெரித்து, துடிதுடிக்க கொடூரமாக கொலை செய்தோம். பின்னர் அவரது கழுத்தில் துப்பட்டாவை கட்டி, அங்கிருந்த மின்விசிறியில் தொங்க விட்டோம். பின்னர், எதுவும் தெரியாதது போல் நாங்கள் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்து பார்ப்பது போல் பார்த்து, அவரது உடலை கண்டு கண்ணீர் விட்டு, கதறியழுவது போல் நடித்தோம். 

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

எங்களின் நடிப்பை போலீசார் உட்பட அங்கிருந்த அனைவரும் நம்பி விட்டனர்.  சோமா கோபாவை மட்டும் யாஸ்மதி சிறுமி என்பதால் அவளுடன் குடும்பம் நடத்தியதாக போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் என்னையும், பச்சாவையும் போலீசார் கண்டு கொள்ளவில்லை. இதனிடையே யாஸ்மதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நாங்கள் கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. நான் போலீசாரிடம் சிக்கிக் கொள்வேன் என்று நினைக்கவில்லை. என்னுடன் இருந்த பச்சா கொலை நடந்த சில தினங்களிலேயே ஜார்கண்டிற்கு தப்பிச் சென்று விட்டான்” என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web