19 விமானங்கள் ரத்து!! பூங்காக்கள் மூடல்!! கோர தாண்டவம் ஆடிய மாண்டஸ்!!

 
பூங்கா விமானம்

தமிழகத்தில் மாண்டஸ் புயல் கோரதாண்டவம் ஆடியுள்ளது. இதனால் கடந்த  2 நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. புறநகர் ரயில், பேருந்து, விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டன. இரவு முழுவதும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மீட்பு குழுவினர், தேசிய பேரிடர் படை அனைத்து மாவட்டங்களிலும் மீட்பு பணியை மேற்கொள்ள நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

மாண்டஸ் புயல்
மழையால் உருவான பாதிப்புக்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார்.  சென்னையில் 2வது நாளாக இன்று விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து புறப்படும் 11 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரும் 8 விமானங்கள் உட்பட 19 விமானங்கள் இன்று ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல்
மாண்டஸ் புயலால், முறிந்து விழுந்த  மரங்களை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web