அட.. கழுத்துல 2 தாலி! முதல் கணவனிடம் சிக்கிய விஏஓ! அலுவலக வாட்ஸ்-அப் குழுக்களில் சந்தி சிரித்த அசிங்கம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அரசம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் வேடியம்மாள் . இவர் திருமணமாகி 2 குழந்தைகளின் தாய். இவருக்கும் மருதேரி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் சென்னகிருஷ்ணனுக்கும் இடையே கள்ளக்காதல் உருவானது. இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து பல இடங்களில் சுற்றி திரிந்தனர்.
இவர்களது கள்ளக்காதலை உறுதி செய்யும் வகையில், இருவரும் மீண்டும் 2வது திருமணம் செய்து கொண்டனர். அதனை பல கோணங்களில் புகைப்படம் எடுத்து இருவரும் கொண்டாடி தீர்த்தனர். கடந்த சில வாரங்களாக வேடியம்மாள் கணவன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டார். இதன் பேரில் அவருக்கு தெரியாமல் அவருடைய செல்போனை ஆராய்ந்தார். அதில் கிராம நிர்வாக அலுவலர் சென்னகிருஷ்ணன் உடன் திருமணம் செய்து கொண்டு கழுத்தில் 2வது திருமணம் செய்ததையடுத்து மினுங்கிக் கொண்டிருந்த தாலியைப் பார்த்து அதிர்ந்தார். கயிற்றில் தாலியுடன் செல்பி புகைப்படம், பல இடங்களில் ஜோடி பறவைகளாக சுற்றி திறந்த புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வேடியம்மாளிடம் கேட்ட போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் வேடியம்மாள் இருக்கும் அனைத்து அலுவலக குழுக்களிலும் அவர் கள்ளக்காதலனுடன் சுற்றியது, திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டார் . இந்த புகைப்படங்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்கள் வரை சென்று சேர்ந்து, இந்த விவகாரம் தற்போது வருவாய்துறை அதிகாரிகளிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!