2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.... 40 பேர் பலி !

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா. கிளிமஞ்சாரோ மாகாணம் மோஷி நகரில் இருந்து தங்கொ நகருக்கு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள 50க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை இரவு சொகுசு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். நெடுஞ்சாலையில் சபசபா என்ற பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
மற்றொரு பேருந்து எதிரில் வந்துகொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதிமாக அந்த பேருந்தின் டயர் வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த சொகுசு பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் 2 பேருந்துகளும் தீப்பற்றி எரிந்தன. இதில் 2 பேருந்துகளுக்குள் இருந்தவர்களும் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பேருந்தில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர்.
மேலும், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இரு பேருந்துகளில் இருந்து மொத்தம் 30 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். ஆனால், இந்த தீ விபத்தில் 2 பேருந்துகளிலும் பயணம் செய்த 40 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!