விடுதியில் இறந்து கிடந்த 2 ஐடி ஊழியர்கள்... ஓரினச் சேர்க்கையால் விபரீதம்... !
சென்னை அமைந்தகரை எம்.எம்.காலனியில் வசித்து வருபவர் லோகேஷ் . இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் அம்பத்தூர் பகுதியில் வசித்து வந்த வாஞ்சிநாதன் என்ற இளைஞரும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 8ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றிருந்த லோகேஷ், வாஞ்சிநாதன் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் லோகேஷின் பெற்றோர் அமைந்தகரையிலும், வாஞ்சிநாதன் பெற்றோர் அம்பத்தூர் போலீசிலும் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வாஞ்சிநாதன் தனது சகோதரி காமாட்சிக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சகோதரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். செல்போன் நம்பரை வைத்து எந்த டவர் பரிசிலீக்கப்பட்டது .அதில் சென்னை முகப்பேர் பன்னீர் நகரில் உள்ள ஒரு தனியார் விடுதி காட்டியதும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாஞ்சிநாதன் தங்கியிருந்த அறைக்கதவை தட்டியுள்ளனர். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் விடுதி ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு லோகேஷ் உயிரிழந்த நிலையில் தரையிலும், வாஞ்சிநாதன் தூக்கிட்ட நிலையிலும் பிணமாகவும் கிடந்தனர். இவர்கள் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில் லோகேஷ் மற்றும் வாஞ்சிநாதன் இருவரும் கடந்த சில மாதங்களாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 8ம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற இருவரும், முகப்பேரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிவிட்டனர் அதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த வாஞ்சிநாதன், லோகேஷை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். பயத்தில் வாஞ்சிநாதனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!