பெரும் அதிர்ச்சி... மீன் குழம்பால் பறிபோன 2 உயிர்கள் !
கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உணவு விஷத்தால் உயிரிழந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. கொல்லம் மாவட்டம் நிலமேல் பகுதியைச் சேர்ந்த ஷாஜி (42) மற்றும் அவரது மாமியார் ரஷீதா பீவி (58) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாஜியின் மனைவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் பரிப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் குடும்பத்திலிருந்த மற்றவர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகவலின்படி, ஆறு பேர் கொண்ட குடும்பம் விழிஞ்சம் பகுதியில் உள்ள கடல் உணவு உணவகத்தில் இரவு உணவு எடுத்துக்கொண்டுள்ளனர். அதன்பின் நான்கு பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உணவு விஷமா அல்லது ஒவ்வாமை எதிர்வினையா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
