பப்பாளி ஜூஸில் தவறி விழுந்து 2 பேர் மூச்சுத்திணறி பலி!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பப்பாளி ஜூஸ் ஆலை செயல்பட்டு வருகிறது. உடுமலை சடையபாளையம் பிரிவு அருகே செயல்பட்டு வரும் தனியார் பப்பாளி ஜூஸ் ஆலையில் பப்பாளி சாறுகள் நிரம்பி இருந்த தொட்டியில் வடமாநில தொழிலாளர்கள் இருவர் தவறி விழுந்ததாக தெரிகிறது.
முதலில் ஒருவர் தவறி விழுந்த நிலையில், காப்பாற்ற முயன்ற மற்றொரு தொழிலாளியும் தவறி விழுந்து இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த தொழிலாளர்கள் ரோகித் திகில், அருண் குமார்கோ ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!