வெளியானது +2 பொதுத்தேர்வு முடிவு... 95.03 சதவீதம் தேர்ச்சி!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியவர்களில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
+2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி, 25ம்m தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது. அந்த பணிகளும் நிறைவு பெற்று மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் முடிந்துவிட்டன.
இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம். இதுதவிர தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும், மாணவர்கள் தாங்கள் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வழியாகவும் அனுபப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!