ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தமிழக வீரர்கள் பலி!!

 
கமலேஷ்

பஞ்சாப் ராணுவ முகாமில் நேற்று அதிகாலையில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனையடுத்து, அதிவிரைவு படை உஷார்படுத்தப்பட்டு ராணுவ முகாமில் அதிதீவிர சோதனை நடத்தப்பட்டது.  இந்த சம்பவத்தை அடுத்து ராணுவ முகாமை சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டுள்ளன. ராணுவ முகாம் முழுவதும்  தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ராணுவ முகாம்
இந்நிலையில், நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில், 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.  அதில் தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியைச் சேர்ந்த லோகேஷ் குமார் மற்றும் சேலம் மாவட்டம் பனங்காட்டை சேர்ந்த கமலேஷ் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் நாளை அல்லது இன்று மாலை சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ முகாம்

இந்த சம்பவத்தில் பயங்கரவாத தாக்குதல் எதுவும் கிடையாது. 2 நாட்களுக்கு முன் 28 குண்டுகளுடன் இருந்த ராணுவ துப்பாக்கி மாயமானது. அதிலிருந்த குண்டுகள் தாக்கி தான்  4 பேர் பலியாகி இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை பொறுத்தவரை ராணுவ வீரர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web