2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!! 2 பேர் படுகாயம்!!
மத்திய பிரதேச மாநிலத்தில் சிங்பூர் ரயில் நிலையம் அருகே 2 சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. 2 ரயில்களும் நேருக்கு நேர் மோதியதால் ரயில் இன்ஜின்கள் தீப்பிடித்து எரியத்தொடங்கின. இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
அத்துடன் 2 ரயில்வே ஊழியர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ரயில்களும் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்ததில் ரயில் பெட்டிகளிடையே அந்த 2 ரயில்வே பணியாளர்கள் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!