பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ₹20 அபராதம்... கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அவதி!

 
கொடைக்கானல்
 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கொடைக்கானல் மலை பகுதியில்  பிளாஸ்டிக் பாட்டில்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பிளாஸ்டிக் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் எனத்  தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனை முழுமையாக அமல்படுத்தாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் ஒரு திடீர் உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின் அடைப்படையில் கொடைக்கானல் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழி பாட்டில்கள் வைத்திருந்தால் அவர்களது பாட்டில்களை பறிமுதல் செய்து ஒரு பாட்டிலுக்கு ரூ.20 வசூலிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. முதற்கட்டமாக இன்று கொடைக்கானல் நகராட்சி சுகாதார பிரிவில் அதிகாரிகள் முதற்கட்டமாக இன்று கொடைக்கானலில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் கொடைக்கானலுக்கு வரக்கூடிய கேரளா பேருந்துகளில் தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 சுமார்  1000க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஒரு பாட்டிலை பறிமுதல் செய்தால் ஒரு பாட்டிலுக்கு ரூ.20 வீதம் அபராதம் விதிக்கப்படும்.   கொடைக்கானல் மலைப்பகுதியில் இருக்கக்கூடிய தனியார் விடுதிகள் மற்றும் பேருந்துகளில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!