பரபரப்பு!! ரூ 2,438 கோடி மோசடி.. !! பாஜக நிர்வாகி அதிரடி கைது !!

 
மாலதி

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆருத்ரா நிறுவன மோசடி. அதாவது அதிக வட்டி தருவதாக கூறி, 4 பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மாலதி

பணம் முதலீடு செய்தால் வட்டியாக பெரும்  தொகை கிடைக்கும் என இந்த நிறுவனங்கள் கூறியுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேரிடம், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை வட்டியாக தருவதாக கூறி ஆசை வார்த்தை காட்டி பொதுமக்களிடம் பணம் வாங்கினர். 

அதாவது ரூ.2,438 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு பெற்று மோசடி செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகிக்கு முக்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மாலதி

குறிப்பாக ஹரிஷ் என்பவர் ஹரிஷ் தரகராக செயல்பட்டு பல கோடி ரூபாய் அளவிற்கு பொதுமக்களிடம் வசூல் செய்து மோசடி செய்தது தெரியவந்தது. மோசடியில் சிக்கியுள்ள ஹரிஷை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டார். பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ஹரிஷை பொருளதாக குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குநரான மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web