கொடுமை... 25 கிலோ தக்காளி பெட்டி ரூ.150 க்கு விற்பனை... விவசாயிகள் வேதனை!

 
தக்காளி விலை உயர்வு
 


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள முத்தனூர், அஸ்தகிரியூர், கெடகாரள்ளி, சில்லார அள்ளி, லிங்கநாயக்கனஅள்ளி, மணியம்பாடி, ரேகடஅள்ளி, மெனசி, பூதநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தக்காளியை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

தக்காளி

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மண்டிகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை சரிந்துள்ளது. 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.500-க்கு விற்பனையான நிலையில் கடந்த வாரம் ஒரு பெட்டி ரூ.200-க்கு விற்பனையானது. அறுவடை கூலி கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்தனர். இதனால் விவசாயிகள் பலரும் பழங்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டனர். வாகனங்களில் தக்காளி விற்பனை செய்யும் வியாபாரிகள் சிலர் தோட்டத்தில் தக்காளியை அறுவடை செய்து வாங்கி சென்றனர்.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

தற்போது தக்காளி விலை மேலும் சரிவடைந்துள்ளது. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதியில் நேற்று ஒரு பெட்டி தக்காளி ரூ.150-க்கு விற்பனையானது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், உள்ளூர் தேவைக்காக மட்டுமே தக்காளி விற்பனையாகி வருகிறது. தொடர் விலை வீழ்ச்சியால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தற்போது தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web