25 ரயில்கள் ரத்து ... புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் விபத்து!
இந்தியாவில் முதல்முறையாக புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் வழியே திட்டமிட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், வத்வா மற்றும் அகமதாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்ற புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் பணியில் பாலத்தின் மீது அமைக்கப்பட்ட இரும்பு கட்டுமானம் நேற்று இரவு 11 மணிக்கு திடீரென விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் புல்லட் ரயிலுக்காக கட்டப்பட்ட பாலம் சேதமடையவில்லை என்றும் என தேசிய அதிவேக ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், 15 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டு, 5 ரயில்கள் நேரம் மாற்றியமைக்கப்பட்டன. 6 ரயில்கள் வேறு பாதைகளுக்கு மாற்றப்பட்டன.
ராட்சத கிரேன்கள் கொண்டு ரயில் தண்டவாளத்தை சீர்செய்யும் பணியில் ரயில்வே துறை ஈடுபட்டு வருகின்றது. சீரமைத்ததும் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
