மினி லாரியில் கடத்த முயன்ற 2500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
Apr 13, 2025, 12:45 IST

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மினி லாரியில் கடத்த முயன்ற சுமாா் 2.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி-ராமேசுவரம் சாலையில் உள்ள டேவிஸ்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சிறிய ரக லாரியை மடக்கி சோதனை செய்தனா். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அந்த வாகனத்தில் 49 மூட்டைகளில் இருந்த சுமாா் 2.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web