காஷ்மீரில் துடிதுடிக்க 27 பேர் சுட்டுக்கொலை... 20 பேர் கவலைக்கிடம்.. அமித் ஷா காஷ்மீர் வந்தடைந்தார்!

ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று வெறித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 27 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் வந்துள்ளார்.
நேற்று ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து தீவிரவாதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சுற்றிலும் மலை, அதில் உயரமான பைன் மரங்கள் நடுவே பசுமையான புல்வெளி என்று இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதி மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது.
புல்வெளியில் குடும்பத்தோடு அமர்ந்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தபடியும், குழந்தைகளோடு உற்சாகமாக ஓடி விளையாடியும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மகிழ்ந்திருந்தனர். ஒரு சிலர் அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்கி சாப்பிட்டபடி இருந்துள்ளனர். மாலை 3 மணி அளவில் பள்ளத்தாக்கின் பைன் மரக் காடுகளில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென புல்வௌியை நாலாபுறமும் சூழ்ந்தனர்.
கையில் இயந்திர துப்பாக்கிகளுடன் இருந்த தீவிரவாதிகளை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களை தீவிரவாதிகள் சுற்றி வளைத்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சுற்றுலா பயணிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். காயம் அடைந்தவர்கள் எழுப்பிய மரண ஓலம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்தது. பின்னர், தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
பெயர் என்ன என்று கேட்டு குறிப்பிட்ட சிலரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக உயிர் தப்பியவர்கள் கூறினார்கள். பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு சாலை வசதி கிடையாது. குதிரை மூலமாகவோ, நடந்தோ தான் அங்கு செல்ல முடியும். இதனால் சம்பவ இடத்தை பாதுகாப்பு படையினர் சென்றடைய நீண்ட நேரமானது. அதற்குள் படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதியினர் குதிரைகள் மூலம் அருகில் உள்ள சாலைக்கு கொண்டு வரத் துவங்கினர்.
பின்னர் படுகாயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்து விட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!