விபரீதம்... பேருந்தில் சென்ற மாணவனை வெட்டிய 3 சிறார்கள் !

 
சிறார்கள்
 

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தில்  11ம் வகுப்பு மாணவர் ஒருவர் பயணம் செய்தார். அப்போது திடீரென பேருந்தை  ஒரு கும்பல் வழிமறித்து நிறுத்தியது. 3 பேர் கொண்ட அந்த கும்பல் மாணவரை கீழே இறக்கி, மற்ற பயணிகள் கண் முன்பே சரமாரியாக அரிவாளால் வெட்டினர். மாணவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். உடனடியாக   அந்த கும்பலினர் அங்கிருந்து தப்பி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

ஆம்புலன்ஸ்

இது குறித்து போலீஸ் தரப்பில்   "தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் வசித்து வருபவர்  தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன். 17 வயதான இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். வார விடுமுறை முடிந்து வழக்கம் போல இன்று பள்ளிக்குச் செல்வதற்காக பஸ்சில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தார். அரியநாயகிபுரத்திற்கு அடுத்து கெட்டியம்மாள்புரம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்தை 3  பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பேருந்து நின்றதும் அதனுள் ஏறிய அந்த கும்பல் தேவேந்திரன் எங்கு இருக்கிறார் எனத் தேடியது. பின்னர் தேவேந்திரனை மட்டும் இழுத்து வந்து பேருந்துக்கு வெளியே கொண்டு வந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து மாணவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனைக் கண்ட பேருந்தில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு கதறித் துடித்தனர். இதனால், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள்  தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து பயணிகளில் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்" எனக் கூறப்படுகிறது.  

உத்தரபிரதேச போலீஸ்

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் வெட்டுக்காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு   மேல் சிகிச்சைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து   துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்த மூவர் கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மாணவனை வெட்டியதாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரிவாளால் வெட்டப்பட்ட 11ம் வகுப்பு மாணவனுக்கு 6 விரல்கள் துண்டான நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் 5 விரல்கள் அறுவைசிகிச்சை மூலம் இணைக்கப்பட்டன. சுமார் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு மாணவனின் 5 விரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ஒட்ட வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web