குற்றவாளிகள் வழக்கிலிருந்து தப்பிக்க உதவிய 3 நீதிபதிகள்!

இந்தோனேஷியாவில் குற்றவாளிகளை வழக்கில் இருந்து தப்பிக்க 3 நீதிபதிகள் உதவியுள்ளனர். இதனையடுத்து இந்த 3 நீதிபதிகளும் கைது செய்யப்பட்டனர். இந்தோனேஷியாவில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. இங்குள்ள வில்மர் குரூப், முஷிம்மாஸ் குரூப், பெர்மதாகியாஜூ என்ற 3 நிறுவனங்கள் பாமாயில் தயாரிக்கும் ஆலைகள் நடத்தி வருகின்றன.
இந்நிறுவனங்கள் 2022 ல் ஏற்றுமதி செய்வதில் பல முறைகேடுகள் செய்ததாக குற்ற்சாட்டு எழுந்தது. இந்த வழக்குகள் இந்தோனேஷியா ஜகர்ட்டா கோர்ட்டில் நடந்தது. 3 நீதிபதிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து வெளியான தீர்ப்பில் 3 நிறுவனங்களும் குற்றம் புரியவில்லை என குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் புலனாய்வு நிறுவனங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்த ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. நீதிபதிகள் 3 பேரும் ஒரு வக்கீல் மூலம் லஞ்சம் ஒருவர் 60 பில்லியன் இந்திய மதிப்பில் 30 கோடியே 73 லட்சத்து 64000 , மற்ற நீதிபதிகள் 2 பேர் ரூ9 கோடி வரை லஞ்சம் பெற்றது கண்டறியப்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை அதிகாரிகள் தெற்கு ஜகர்ட்டா மாவட்ட கோர்ட் தலைமை நீதிபதி முஹம்மது ஹாரீப் உட்பட 3 நீதிபதிகளை கைது செய்துள்ளனர். இத்தகவலை அரசு அட்டர்னி ஜெனரல் அலுவலக செய்தி தொடர்பாளர் ஹா்லி ஸ்ரீஹரி உறுதி செய்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!