மனைவி படற கஷ்டத்த தாங்க முடியல... 10 வயது மகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!
கோவை மேட்டுப்பாளையம், பிரஸ் காலனி, சாந்தி மேடு தம்பு நகரில் வசித்து வந்த கமலேஷ் (48) மற்றும் மனைவி இலக்கியா (45) தங்களுடைய மகளாகிய எக்சிதா ஏஞ்சேல் (10) உடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். கமலேஷ் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக, இலக்கியா செவிலியராக பணியாற்றி வந்தனர்.

இலக்கியா நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்திருந்தார். நோய்க்கு தீர்வு காணாத நிலையில், குடும்பம் வருந்தி, ஞாயிற்றுக்கிழமை இரவு மகளுக்கும் தாங்களும் விஷம் கொடுத்து உயிரிழந்துள்ளனர்.

திங்கட்கிழமை காலை அக்கம் பக்கத்தினர் தகவல் வழங்கியதின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரின் சடலங்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி கூராய்வுக்காக வைத்தனர். போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
