சொகுசு கார் மோதியதில் 3 பெண்கள் துடிதுடித்து பலி!! 3 பேர் கவலைக்கிடம்!!

 
கோர விபத்து

 விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது  புதுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும்   மீனவ பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து கிராமப் பகுதியில் விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.  இன்று ஜூலை 16ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை மீன்கள் அதிகம் விற்பனையாகும் என்பதால் புதுச்சேரிக்கு மீன் வாங்க அதிகாலை புதுக்குப்பம் மீனவ பெண்கள் லட்சுமி , கோவிந்தம்மாள் , நாயகம், கமலம், கெங்கையம்மாள், பிரேமா  என  6 பேர் ஆட்டோவுக்காக கிழக்கு கடற்கரை சாலையில்  காத்து நின்றனர். 

மீன் கடை மார்க்கெட் அசைவம்


அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 6 பெண்கள் மீதும் மோதியது. இதில் லட்சுமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயம் அடைந்தனர்.

போலீஸ்
அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு  அருகில்  தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.   அங்கு சிகிச்சை பலனின்றி கெங்கையம்மாள்   பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் கார் கவிழ்ந்து அப்பளமாக நொறுங்கியது. காரை ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த ஓட்டுநர் விக்னேஸ்வரன், மற்றும் காரில் பயணம் செய்த கௌதம், சேது, பிரசாந்த், திரிஷா  5 பேரும்  புதுச்சேரி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் விற்பனைக்கான சென்ற மீனவ பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web